வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-16 14:40 GMT

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து செயற்கை மணலை ஏற்றிக் கொண்டு சிறிய லாரி முதல் பெரிய லாரி வரை செல்கின்றன. லாரிகளில் பாடி மட்டத்திற்கு மேல் செயற்கை மணலை ஏற்றிச்செல்லும்போது லாரியின்மேலே தார்பாய்கள் போட்டு மூடாமல் செல்வதால் லாரியில் உள்ள மணல் பறந்து சென்று லாரியின் பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில் பட்டு, அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்