பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் கிராமத்தில் செட்டிகுளம் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நாட்டார்மங்கலத்தில் இறங்கி சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து செல்கின்றனர். துறையூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு செட்டிகுளம், நாட்டார்மங்கலம் வழியாக ஆலத்தூர் கேட் வரை டவுன் பஸ் செல்கிறது. இந்தப்பஸ்சை பள்ளி மாணவ-மாணவிகள் நலன் கருதி நாட்டார்மங்கலத்தில் இருந்து கூத்தனூர் வழியாக ஆலத்தூர்கேட் வரை பஸ் வசதியை நீட்டிக்க ஏற்பாடு செய்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.