ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-15 13:24 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் உள்ள உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலம் இருபுறமும் இறங்கி வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இடதுபுறம் திரும்பி வருவதற்கு பதிலாக, வலதுபுறம் திரும்பி சர்வீஸ் சாலை வழியே வருகிறது. அப்போது எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதில் பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இடதுபுறம் வாகனங்கள் திரும்ப ஏதுவாக சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் அல்லது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்