திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தினமும் எண்ணற்ற ஊர்களுக்கு அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், சென்னை, உப்பிலியபுரம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, ராசிபுரம், மல்லியகரை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம் மற்றும் பச்சைமலை செல்லும் பஸ்கள் பாலக்கரை வழியாக சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் உருவாகி வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.