புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள கீழாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை சிலர் கால்நடை தீவனம் வைக்கும் இடமாக மாற்றி வருகின்றனர. இதனால் பொதுமக்கள் இந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.