சமூகவிரோதிகளின் கூடாரமான பயணிகள் நிழற்குடை

Update: 2022-08-12 12:28 GMT
வலங்கைமான் குடவாசல் மெயின் சாலையில் குப்பசமுத்திரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்களின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையை குப்பசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி, சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், தரைதளம் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. முதியவர்கள், பெண்கள் உள்ளே அமர முடியாமல் நீண்ட நேரம் நிற்கும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி காணப்படும் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி