விபத்து அபாயம்

Update: 2022-08-11 14:56 GMT

விபத்து அபாயம்

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் கோவில்வழி அருகே பெருந்தொழுவு பிரிவு உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் இடத்தில் சாலையை மறைக்கும் வகையில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாக வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் போது மிகவும் சிரம்மப்படுகின்றனர். சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன் சம்பந்தப்பட்டோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

லோகநாதன், பெருந்தொழுவு 96594 55289

மேலும் செய்திகள்

பஸ் வசதி