வளர்ப்பு பிராணிகளை தாக்கும் நாய்கள்

Update: 2022-08-11 12:52 GMT
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா ஓவரூர் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை கடித்து விடுகின்றன.மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து கொன்று விடுகிறது. இரவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி