அதிகாரிகளின் அலட்சியம்

Update: 2022-08-11 09:19 GMT

நாகர்கோவில் வடசேரியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பஸ்களின் வழித்தட எண் மற்றும் பயண நேரம் ஆகியவை அடங்கிய பலகை வைக்கப்பட்டுள்ளது. வடசேரியில் இருந்து நெல்லை மாவட்டம் செட்டிகுளத்துக்கு பல ஆண்டுளாக 3 'பி' என்ற பஸ் சுசீந்திரம், மயிலாடி, அஞ்சுகிராமம் வழியாக செல்கிறது. ஆனால், அந்த பலகையில் 3 'டி' என தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தவறான பஸ்சில் சிரமப்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான பஸ் வழித்தட எண்ணை எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், பண்ணையூர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி