பஸ்களின் மேற்கூரைகளை சரிசெய்ய கோரிக்கை

Update: 2022-08-10 14:23 GMT

திருச்சி மாநகரில் அரசு மாநகர பஸ்களில் சிலவற்றில் இருக்கைகள் மற்றும் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மேற்கூரையின் வழியே உள்ளே வருகிறது. இதனால் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகள் திறந்து மூடுவதற்கு இயலாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்