குகைவழிப்பாதை அமைக்க வேண்டும்

Update: 2022-08-10 14:13 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் வழியாக தினமும் பயணிகள் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி ரெயில்வே கேட் பூட்டப்பட்டு வருவதால் இந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆம்புலன்சுகள், கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரெயில்வே கேட் பகுதியில் குகைவழிப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்