நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தன்குடி ஊராட்சியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மணலால் ஆன தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் அந்த பாலம் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.