விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகள்

Update: 2022-08-08 14:18 GMT
திருச்சி மற்றும் கரூர் மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் குளித்தலை நகர பகுதி வழியாக சென்று வருகின்றன. அவ்வாறு வரும் பஸ்களின் டிரைவர்கள் குளித்தலை பஸ் நிலையம் மற்றும் சுங்ககேட் பகுதியில் நிற்கும் பயணிகளை தங்கள் பஸ்சில் ஏற்றிச்செல்ல வேண்டும் என்கிற காரணத்தால், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே போட்டி ஏற்படுகிறது. அதுபோல அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையேயும் இந்த போட்டி உள்ளது. இதன் காரணமாக பஸ்சின் டிரைவர்கள் நகரப் பகுதிக்குள் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு அதிக வேகமாக தங்கள் பஸ்களை இயக்கி செல்கின்றனர். மேலும் அதிக ஒளியை எழுப்பியவாறு செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்