ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலையோரத்தில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்துகளும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அங்கு தாறுமாறாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.