சாலையும் போடல... பஸ்சும் வரல...

Update: 2022-08-06 06:38 GMT
பண்ருட்டியை அடுத்த பெரியகள்ளிப்பட்டு, ஏரிப்பாளையம், குச்சிப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலையை புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் போடப்பட்டன. ஜல்லிக் கற்கள் பரப்பி ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை சாலை போடுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அந்த ஊருக்கு வரும் டவுன் பஸ்சும் அவ்வழியாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பித்து, பஸ் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி