பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரியலூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.