சேதமடைந்த தரைப்பாலம்

Update: 2022-08-01 14:14 GMT
மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியை சுற்றிலும் தேவிகுளம், கோட்டிக்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் புதுச்சேரி, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும்
என்றால் இங்குள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் செல்லவேண்டும். ஆனால் வண்டிப்பாளையம்-ஆத்திக்குப்பம் இடையே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் சேதமடைந்து விட்டது. இதனால் அவ்வழியாக அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. ஆகவே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்