கருவேல மரங்களால் காயம் அடையும் மக்கள்

Update: 2022-07-28 12:19 GMT
திருச்சி-சிதம்பரம் சாலையில் லால்குடி-பூவாளூர் இடையே சாலையின் இருபுறத்திலும் கருவேல மரங்கள் மற்றும் செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பஸ்களில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மீது முட்கள் அடிக்கிறது. இதனால் அவர்கள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்