பட்டுப்போன மரம் வெட்டப்படுமா?

Update: 2022-07-28 11:32 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் ரெயில்வே கேட் அருகே மணல்மேடு சாலையில் மரம் ஒன்று பட்டுபோன நிலையில் உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய சூழலில் நிற்கிறது. அந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்மற்றும் மாணவ-மாணவிகள், இருசக்கர, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, பட்டுபோன மரத்தினால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி