திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் சன்னதி வீதியும் காந்தி ரோடும் இணையும் ட்ரங்க்ரோட்டில் மாம்பழச்சாலையிலிருந்தும், நம்பர் 1டோல்கேட்டிலிருந்தும் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. இதனால் ஶ்ரீரங்கத்திலிருந்து திருவானைக்காவலுக்கும், திருவானைக்காவலில் இருந்து ஶ்ரீரங்கத்திற்கும் வாகனங்களில் செல்பவர்களும், பாதசாரிகளும் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளதோடு விபத்து ஏற்படக்கூடிய அசாதாரண சூழ்நிலையும் நிலவுகிறது. எனவே இவ்விடங்களில் தானியங்கி சிக்னல் அமைத்தோ அல்லது போக்குவரத்து காவலர்களை நியமித்தோ போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.