அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகரம் 4 ரோட்டில் பகல், இரவு நேரங்களில் ஆடு, மாடுகள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.