பஸ் வசதி தேவை

Update: 2023-09-13 14:52 GMT
கிள்ளை அருகே தைக்கால் பகுதியில் இருந்து ஏராளமாக மாணவ-மாணவிகள் சி.முட்லூர் மற்றும் சிதம்பரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் கிள்ளை வரை மட்டுமே செல்கிறது. இதனால் தைக்கால் பகுதி மாணவர்கள் கிள்ளைக்கு நடந்து சென்று, அங்கிருந்த பஸ் ஏறிச்செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தைக்கால் கிராமம் வரை பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்