ரெயில்வே பாலம் புதிதாக கட்டப்படுமா?

Update: 2023-09-13 14:19 GMT


திருவாரூரில் இருந்து நாகை செல்லும் பைபாஸ் சாலையில் சீனிவாசபுரம் என்ற இடத்தில் ரெயில்வே பாலம் அமைந்துள்ளது. மிக செங்குத்தாக அமைந்த இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. தற்பொழுது இந்த பாலம் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு இந்த பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டித் தர சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்