சிக்னல் அமைக்கபடுமா?

Update: 2023-09-13 14:17 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா தண்டலம் கிராமத்தில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியார் பல்நோக்கு ஆஸ்பத்திரி உள்ளது. மக்கள் மற்றும் நோயாளிகள் இந்த சாலையை கடந்து தான் ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். ஆனால் இங்கு சிக்னல் போன்ற வசதி இல்லாததாலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதாலும் மக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்