நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-09-10 16:04 GMT

சாத்தான்குளத்தில் இருந்து பேய்க்குளம், மூலைக்கரைப்பட்டி, நெல்லை வழியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக சாத்தான்குளம் செல்லும் இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் அதிகாலையிலே சொந்த ஊர்களுக்கு செல்ல எளிதாக இருந்தது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்