அடிக்கடி விபத்து

Update: 2023-09-06 17:16 GMT

 ஈரோடு மூலப்பாளையம் கரூர் ரோடு, பழனி ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் வாய்க்கால் மேடு வழியாக வந்து கரூர் ரோடு செல்பவருக்கு சிக்னல் இல்லை. அந்த வழியாக காலை, மாலை பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் அதிகமாக மோட்டார்சைக்கிள், ஆட்டோக்களில் செல்கின்றனர். எந்த சிக்னலை‌ பார்த்து செல்வது என குழப்பமும், அடிக்கடி விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரூர் ரோடு செல்பவர்களுக்கு குழப்பம் இல்லாமல் சிக்னல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்