தடுப்பு சுவர்கள் அவசியம்

Update: 2023-09-06 14:54 GMT

பாலக்கோடு நகருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர். பிரதான மையமாக உள்ள பாலக்கோடு நகரில் தற்போது பஸ் நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிக பஸ் நிலையம் தக்காளி மண்டி அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் புறவழி சாலையை பயன்படுத்தி வருகின்றன. மேலும் புறவழிச்சாலை பகுதியில் அரசு பள்ளி, மருத்துவமனை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் சாலையை கடக்கும் சூழலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் தடுப்பு சுவா்கள் அவசியம் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பாலா, பாலக்கோடு.

மேலும் செய்திகள்