பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-09-03 16:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பணிக்காக ஓசூர், கிருஷ்ணகிரிக்கு செல்கிறார்கள். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில் பஸ்கள் வந்து செல்கின்றன. இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் சூளகிரிக்கு வருவது இல்லை. இதனால் சூளகிரி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்து புறப்படும் பஸ்களில் சூளகிரி சுற்று வட்டார பயணிகளை ஏற்றுவதில்லை. எனவே இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையிலாவது சூளகிரி பகுதி மக்களை இறக்கி விடும் வகையில் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்