போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-27 10:26 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் சாலையை ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு கடந்து செல்கின்றனர். ஆனால் போக்குவரத்து நெரிசலால் அவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. ஒரு சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசாரை பணியமர்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்