பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2023-08-23 08:46 GMT

நாகர்கோவில்-பள்ளம், மேலகிருஷ்ணன்புதூர்-நாகர்கோவில், மணக்குடி-நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு 36, 36 ‘பி’ அரசு பஸ்கள் இயப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் மேலசரக்கல்விளை, கீழ சரக்கல்விளை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் மேலசரக்கல்விளை, கீழ சரக்கல்விளை வழித்தடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் மீண்டும் பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்