பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2023-08-13 17:57 GMT

சாத்தான்குளம் அருகே மேல நடுவக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு புதிய பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்