சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

Update: 2023-08-13 11:41 GMT

திருச்சி சுப்பிரமணியபுரம் தொடங்கி மாத்தூர் ரவுண்டானா வரையில் உள்ள திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டுள்ளது. மைய தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நெடுஞ்சாலையில் மாடு, ஆடு, குதிரை, நாய் போன்றவை நடமாட்டம் குறையாமல் உள்ளது. இரவு நேரங்களில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் விமானநிலையம் தொடங்கி ஒளியூட்டும் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால் சிறு சிறு இருசக்கர வாகன விபத்துகள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்