கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-07-30 15:24 GMT

திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு பயணிகள் செல்ல குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிலும் கூட்ட நெரிசலில் சிக்கியபடி தான் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்