பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-07-30 10:55 GMT
கரூரில் இருந்து வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில்மணவாடி பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் வந்து மணவாடி, அய்யம்பாளையம்,பெரியார் நகர், கத்தாளப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் வந்து தினந்தோறும் பஸ் ஏறியும் இறங்கியும் செல்கின்றனர். அவ்வாறு வரும் பொது மக்கள் பசுக்காக காத்திருக்கும் போது நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது இடித்து அகற்றி விட்டனர். எனவே பஸ்க்காக காத்திருக்கும் பயணிகள் நலன் கருதி புதிய பயணியர் நிழல் குடை அமைத்து தர வேண்டும் எனகேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்