நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-07-26 11:41 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் கிராமத்தில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தநல்லூர் ஒன்றிய அலுவலக பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறி செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள், நோயாளிகள் நிழற்குடை இன்றி மழை பெய்யும் போதும், வெயில் காலங்களிலும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்தநல்லூர் ஒன்றிய அலுவலக பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்