போக்குவரத்து இடையூறு

Update: 2023-07-26 07:48 GMT

வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட சேனாப்பள்ளி திருப்பிலிருந்து வேம்பனூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இருபக்கமும் பாசன வாய்கால் செல்கிறது. ஆனால், இந்த குறுகிய சாலையோரத்தில் கால்வாயை தூர்வாரிய கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அந்த இடத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.தேவதாஸ்,ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்