பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

Update: 2023-07-19 17:49 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை-சங்கராபுரம் சாலையில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் சங்கராபுரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் செல்லம்பட்டு, பாலப்பட்டு மற்றும் மோட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்