கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2023-07-19 15:27 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்ல இரவு நேரங்களில் குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் இரவு நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்