பயணிகள் அவதி

Update: 2023-07-19 12:16 GMT

ஈரோடு-பூந்துறை பிரதான சாலையில் உள்ளது கஸ்பாபேட்டை. இங்கு டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கின்றன. மற்ற பஸ்கள் நின்று செல்வது கிடையாது. இதனால் பழனி போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதுவும் இரவு நேரங்களில் கடும் அவதியடைந்து வருகிறார்கள். பூந்துறை சென்று அங்கிருந்து வேறு பஸ் ஏறி பாதுகாப்பின்றி செல்ல வேண்டியது உள்ளது. எனவே கஸ்பாபேட்டையில் பஸ் நிறுத்த வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்