சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம்

Update: 2023-07-19 11:26 GMT

கரூர் மாவட்டம் நடையனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே நொய்யல்-வேலாயுதம்பாளையம் தார் சாலையின் குறுக்கே பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் அருகே போதுமான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் நிலை தடுமாறி குழிக்குள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயமான சூழ்நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையின் குறுக்கே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் நெடுகிலும் பெரிய அளவிலான தடுப்புகள் அமைத்து வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்