கரூர் மாவட்டம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெறிசாலை தவிர்க்கும் வகையில், செம்மடையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பாலம் கட்டும் பணி விரைவாக நடந்து வந்த நிலையில், தற்போது கடந்த 1 மாதமாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.