மாணவர்கள் அவதி

Update: 2023-07-05 16:15 GMT

விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்தில் காலை வேளையில் இயக்கப்படும் பஸ் காலதாமதமாக வருகிறது. ஆதலால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் மருளுத்து சென்று பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். எனவே இக்கிராமத்தில் பஸ் காலதாமதமாக வருவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்