தாறுமாறாக நிறுத்தப்படும் ஆட்டோக்கள்

Update: 2023-07-02 17:02 GMT
கடலூர் பஸ் நிலையம் செல்லும் சாலை, உழவர் சந்தை எதிரே உள்ள சாலையில் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நொிசல் அதிக அளவில் ஏற்பட்டு வருவதால், மாநகர மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்