கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குளத்துப்பாளையத்திலிருந்து வேட்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள உபரிநீர் கால்வாயின் குறுக்கே இருந்த பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலம் கட்டும் பணி கால தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் தவிர பெரிய வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.