பஸ் வசதி தேவை

Update: 2023-06-28 18:14 GMT
கடலூரில் இருந்து ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், தீர்த்தனகிரி வழியாக கள்ளையாங்குப்பம் பகுதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பணியாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கடலூர்-கள்ளையாங்குப்பம் வழித்தடத்தில் மீண்டும் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்