பஸ் நிறுத்தம் வேண்டும்

Update: 2023-06-28 13:38 GMT

திருவள்ளூர், மணலி புதுநகர் அடுத்த சின்ன ஈச்சங்குழி பகுதியில் நாள் தோறும் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் செல்கிறது. ஆனால், ஈச்சங்குழியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்சில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியவர்களும், மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்