பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-28 12:05 GMT
அரியலூர் மாவட்டம் செந்துறையில் இருந்து திட்டக்குடி வரை 10-ம் எண் கொண்ட அரசு பஸ் திட்டக்குடி, பெண்ணாடம் ஆர்.எஸ். மாத்தூர் வழியாக செந்துறை வரை கடந்த காலங்களில் இயக்கப் பட்டு வந்தது. இதனால் கல்லூரி, பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன் அடைந்து வந்தனர். இந்தநிலையில் தற்போது பஸ் இயக்கப்படாததால் அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்