பராமரிக்கப்படாத பஸ் நிலையம்

Update: 2022-04-28 14:55 GMT
சென்னை பெரம்பூர் திரு.வி.க நகர் பஸ் நிலையத்தின் உள்ளே இரவில் படுக்கும் நபர்கள் அங்கேயே சிறுநீர் கழிப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பஸ் ஏற வரும் பயணிகள் மூக்கை பொத்திக்கொண்டு பஸ் நிலையத்தில் நிற்கும் அவலம் நிலவுகிறது. மேலும் முகம் சுழிக்கும் வகையிலும் சுகாதாரமற்ற முறையிலும் பஸ் நிலையம் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. எனவே பஸ் நிலையத்தை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்