பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-25 16:56 GMT
வேப்பூர் தாலுகா நல்லூர் ஒன்றியம் திருச்சி-சென்னை சாலையில் கூத்தக்குடி ரெயில் நிலையம் அருகே அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆ.மரூர், சேதுவராயன்குப்பம், மாளிகைமேடு, பா.கொத்தனூர், மேலக்குறிச்சி, கீழக்குறிச்சி, காட்டுமைலூர் ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனா். எனவே மேற்கண்ட பகுதிகளில் இருந்து பள்ளிக்கு செல்ல பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்