விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் சிலர் தங்கள் வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையில் ெசல்வோர், வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.